Tuesday, January 25, 2011

வாழ்க பாரதம் !!

மானிடா...சற்றே நினைத்து பார், 
அவளின் பாசத்திற்கு யார் தான் நிகர் ?

பெற்றெடுக்கவில்லை என்றாலும், 
தத்தெடுத்தால் நம்  அன்னை...
நாம்  யாவரும் தனி ரகம்-
இருந்தும் ஊக்குவித்தால் நம் அன்னை ...

ஆம் ...
தொட்டிலிடும் வயதில் -
நமக்கே உண்டான மொழியில் தாலாட்டு பாடினால் ...
வளரும் பருவத்தில் அவள் நமக்கு -
அணிவித்து அழகு பார்த்த துணி ரகங்கள் தான் எத்தனை ...

அண்ணனுக்கு பட்டு துணி ,
உடன் பிறந்தவளுக்கு பனாரஸ் புடவை ,
தம்பிக்கு கதர் சட்டை,
கடை குட்டி மகளுக்கு காஞ்சி பட்டில் பாவாடை ....

மானிடா...சற்றே நினைத்து பார், 
அவளின் பாசத்திற்கு யார் தான் நிகர் ?

உண்ணும் பழக்கமும் வேறுபட ,
ருசி அறிந்து உணவு கொடுத்தால் ...

அண்ணனுக்கு பச்சரிசி சாதம் ,
உடன் பிறந்தவளுக்கு கோதுமை ரொட்டி ,
தம்பிக்கு தானிய வகைகள் ,
கடை குட்டி மகளுக்கு கீரை வகைகள் ...

மானிடா...சற்றே நினைத்து பார், 
அவளின் பாசத்திற்கு யார் தான் நிகர் ?

நாம் மொழி பற்றில் வேறுபட்டோம் -
பற்றறிந்து கற்று கொடுத்தால் ...

அண்ணனுக்கு செந்தமிழும் ,
உடன் பிறந்தவளுக்கு வட மொழியும் ,
தம்பிக்கு கொஞ்சி பேசும் மலையாளமும் ,
கடை குட்டி மகளுக்கு ஆங்கிலமும் ...

மானிடா...சற்றே நினைத்து பார், 
அவளின் பாசத்திற்கு யார் தான் நிகர் ?

இப்படி பல வேற்றுமைகள் இருந்தும் ,
சமமாக அரவணைத்தால் நம் அன்னை... 
நம் இஷ்ட்ட தெய்வங்கள் எதுவாயினும் ,
முறையே கும்பிட  கற்றுகொடுத்தால் ...

வேற்றுமையிலும் ஒற்றுமையை காண, 
ஊட்டி  வளர்த்தால் நம் அன்னை...

மானிடா...சற்றே நினைத்து பார், 
அவளின் பாசத்திற்கு யார் தான் நிகர் ?

நிகரற்ற  அவளின்  பாசத்திற்கு, 
நாம் ஆற்றும்  ஓர்  செய்நன்றி -
அவள்  கற்பித்த  இந்த  பாரம்பரியம், 
என்றும்  நிலைக்கதக்க  நாம் நடப்பது ...

அவள்  வகுத்த  ஒற்றுமை  பாதையில்,
வழி  நடந்து  பறைசாற்றுவோம்- 
அவளின் பெருமையை...

ஆம் 
அவள்  வகுத்த  ஒற்றுமை  பாதையில் ,
வழி  நடந்து  பறைசாற்றுவோம்-
நம் அன்னையின்  பெருமையை ...

வாழ்க என் அன்னை ...
வாழ்க என்  பாரதத்தாய் ...

வந்தே  மாதரம் !!

இனிய குடியரசுதின வாழ்த்துக்கள் ...

No comments:

Post a Comment