அதை மேலும் அழகாக்கும் மான்கள் ...
இதமான தென்றல் காற்று ,
அதை மேலும் இதமாக்கும் மழைச்சாரல் ...
அளவான கண்டிப்பு ,
அதை மேலும் மிகை படுத்தும் சிறு குறும்புகள் ...
ஆழமான நட்பு ,
அதை மேலும் ஆழப்படுத்தும் சின்ன சின்ன சண்டைகள் ...
ஆம் ...
இயற்கை அழகு,
இதமான தென்றல் காற்று ,
அளவான கண்டிப்பு ,
ஆழமான நட்பு ...
இவையெல்லாம் இனி ,
வெறும் கானல் நீராய் ....
விட்டு பிரிய மனமில்லாமல் ,
நேசித்த தருங்களும் ,
சுவாசித்த நட்பையும் ,
நிலையாய் , நெஞ்சில் நிறுத்தி ,
பிரிய மனமில்லாமல் விடை பெறுகிறேன் ...
மீண்டும் இக்கல்லூரிச்சாரலில் நனையும் ஏக்கத்தில் ...


No comments:
Post a Comment