Saturday, May 21, 2011

மாற்றங்கள் இருப்பினும் மாறாதது ...

மாற்றங்கள் நிறைந்த இவ்வுலக வாழ்க்கையில் ,
       நம்மை மாற்றும் ஆற்றலும் ,
           நம் பிணைப்பு மாறாத ஆற்றலையும் கொண்ட உறவு ,
                 நம் நட்பு...


தத்தி தவழும் பிள்ளையாய் ,
காலடி எடுத்து வைத்தோம் கல்லூரி வாசலில் ....
முகவரி அறியாமல், முகம் காண முனைந்தோம் ...
முகம் கண்ட பின், மனம் அறிந்தோம் ...
மனம் அறிந்ததால், புரிதலில் பினைந்தோம் ...


இன்று ...

புரிதலினால் , பிரிவு நம்மை பினமாக்க, 
நட்பென்னும் சுவாசத்தினால் உயிர் கொண்டிருக்கிறோம் ...

காலங்கள் மாறினாலும் , 
காலம் கடந்த நம் நட்பு மாறாது ...

நீயும், நானும் , இனி வேறு பாதையில் ...
இருந்தும் ...

காலம் கடந்து நாம் எண்ணிப்பார்க்கையில் ,
இதமாய் வருடிச்செல்லும்  இந்த நினைவுகள் ,
மீண்டும் உயிர்பெறும் நம் இதழோர புன்னகையில் ...

No comments:

Post a Comment