நம்மை மாற்றும் ஆற்றலும் ,
நம் பிணைப்பு மாறாத ஆற்றலையும் கொண்ட உறவு ,
நம் நட்பு...
தத்தி தவழும் பிள்ளையாய் ,
காலடி எடுத்து வைத்தோம் கல்லூரி வாசலில் ....
முகவரி அறியாமல், முகம் காண முனைந்தோம் ...
முகம் கண்ட பின், மனம் அறிந்தோம் ...
மனம் அறிந்ததால், புரிதலில் பினைந்தோம் ...
இன்று ...
புரிதலினால் , பிரிவு நம்மை பினமாக்க,
நட்பென்னும் சுவாசத்தினால் உயிர் கொண்டிருக்கிறோம் ...
காலங்கள் மாறினாலும் ,
காலம் கடந்த நம் நட்பு மாறாது ...
நீயும், நானும் , இனி வேறு பாதையில் ...
இருந்தும் ...
காலம் கடந்து நாம் எண்ணிப்பார்க்கையில் ,
இதமாய் வருடிச்செல்லும் இந்த நினைவுகள் ,
மீண்டும் உயிர்பெறும் நம் இதழோர புன்னகையில் ...

No comments:
Post a Comment