மழலை அல்லா மூத்தவனே
பைத்தியம் அல்லா தெளிந்தவனே
துறவி அல்லா தோழனே
பிணமும் அல்லா உயிர் உள்ளவனே..
ஏனோ அறியாமை உனக்கு
முதிர்ச்சி எனும் போர்வையில்
அப்பட்டமில்லா மனங்களை தொலைத்து
மாயை என்னும் சிறைக்குள்
சிக்கி தவிக்கும் சிறைவாசி ஆனாயே...
No comments:
Post a Comment